வகை  |  odb

நாள் 4: உன்னைப் போல

வாசியுங்கள்: லேவி 19: 1-18, 33-34

“யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்”. (வ.33-34)

பெல்ஜியம் நாட்டில் கீல் ஒரு தனித்துவமான மக்கள்தொகை கொண்ட ஒரு அழகான நகரமாக இருக்கிறது. அங்குள்ள மக்களில் கணிசமான சதவீதம் மனநோய் உள்ளவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நபர்களுக்கு விருந்தளித்துப் பராமரிக்கும் குடும்பங்களுக்கு நோயுற்ற அந்த விருந்தினர்களின் நோயைப் பற்றிய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.…

நாள் 3: இரக்கமுள்ள மனம்

வாசியுங்கள்: மத்தேயு 25:31-46

வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள் (வச.36).

பல ஆண்டுகளுக்கு முன்பு, இருமுனை மூளைகோளாறால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்ப உறுப்பினருக்குத் தீவிர மனச்சிதைவு ஏற்பட்டது. இந்த தீவிர மனநோயால் அவர் வேலையை இழந்தார், சிறைச்சாலை செல்ல நேரிட்டது மேலும் வீடற்றவராகவும் மாறினார். அவருக்கு எவ்வாறாவது உதவிசெய்ய இரண்டு மாதங்களாக நான் சமூக சேவையாளர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைப்பேசி மூலம் பல முயற்சிகளை மேற்கொண்டேன். எனது குடும்ப உறுப்பினரின் திருச்சபை நண்பர்களையும் தொடர்பு கொண்டேன். ஆனால்…

நாள் 2: ஓய்வு நேரம்

வாசியுங்கள்: யாத்திராகமம் 16:16-30

மோசே அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான். (வ.23)

ஒரு உலகளாவிய அறிஞர் வேதாகமக் கல்லூரிக்குச் சென்றபோது, ஞாயிற்றுக்கிழமை அன்று தோட்ட வேலை செய்யும் ஒரு சக அமெரிக்க ஊழியரைக் கண்டு வினோதமாக உணர்ந்தார். அவரைப் பொறுத்தமட்டில், அந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் இச்செயலானது ஓய்வு நாளுக்கு ஏற்றதாகத் தோன்றவில்லை. ஆனால் அவரது சக ஊழியர் நடுதல், விதைத்தல் மற்றும் தோண்டுதல் மூலம்…

நாள் 1: முரண்படும் கலாச்சாரங்கள்

வாசியுங்கள்: யோவான் 17:1-26

நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். (வ.16-17)

 

பல்வேறு சமூக ஊடக தளங்களை நம்மில் பெரும்பாலோர் நன்கு அறிந்திருக்கிறோம், ஆனால் முன்பின் அறிமுகமில்லாதவர்களும் கூட உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறிப்புகளை ஒரு சமூக ஊடகத்தின் வாயிலாக முழுமையாக மதிப்பிட இந்த செயலிகள் அனுமதிக்கின்றன. இதனால் பாதிப்படைந்த ஒருவர் தன் நண்பரிடம், தன் இளைய மகள் இவர்களால் மோசமான மதிப்பீட்டைப் பெற்றதால் எவ்வாறு பாதிக்கப்பட்டாள் என்பதை பகிர்ந்துகொண்டார்.

இங்கிலாந்தில் உள்ள ராயல் சொசைட்டி ஃபார்…

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார். 

 

இயேசுவின் அதிகாரம்

பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது.